டிவிட்டர் நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியா இ பாதுகாப்பு ஆணையம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் ரூ.3.2கோடி அபராதம் விதித்துள்ளது.
டிவிட்டர் மற்றும் கூகுள் நிறுவனங்களிடம் ஆஸ்திரேலியாவின் இ பாதுகாப்பு ஆணையமானது, சிறார் பாலியல் சுரண்டல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தின் நேரடி ஒளிபரப்பு ஆகியவற்றை எவ்வாறு கையாள்கிறீர்கள் என விளக்கம் கேட்டது. ஆனால் 2 நிறுவனங்களும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
இந்நிலையில் டிவிட்டர் நிறுவனத்துக்கு 3,85,000 டாலர் அபராதம் விதித்து இ பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.