மாதவன்.
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று வியாழக்கிழமை(03) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒளிபாய்ச்சி குறுகிய கண்களை கொண்ட(சுருக்குவலை)வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டதால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வெற்றிலைக்கேணி கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கட்டைக்காட்டை சேர்ந்தவர்கள் என்பதோடு உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.