பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடங்கிய போரில் இதுவரை 2,808 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு, வான்வழித் தாக்குதல்களில் 10,859 பேர் காயமடைந்துள்ளனர்.
1000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களின் உடல்கள் குண்டுகளால் அழிக்கப்பட்ட கட்டிடங்களில் மீட்கமுடியாதவாறு சிக்கியுள்ளமை கவலையை ஏற்படுத்துகின்றது.
இப்போர் நிலைமையால் 1400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.