மன்னார், கட்டுக்கரைக் குளத்துக்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் மேய்ச்சல்தரையை விடுவிக்குமாறு வலியுறுத்தி, நானாட்டான்டான்முசலி கால்நடை வளர்ப்போர் நேற்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பண்ணையாளர்கள் தெரிவித்ததாவது;
புல்லறுத்தான் கண்டல் மேய்ச்சல் தரையை விடுவிக்குமாறு பல்வேறு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்ச்சியாக எழுத்துமூலம் வலியுறுத்தி வருகின்றோம். நேரடியாகவும் பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் மேய்ச்சல்தரை தொடர்பில் தீர்க்கமான எந்தப் பதிலும் இல்லை. கால்நடைகளை மேய்ச்சலுக்காக மாந்தை மேற்கு, இலுப்பைக்கடவை பகுதிகளுக்குக் கொண்டுசெல்ல வேண் டியிருக்கின்றது. இதனால் கால்நடை இழப்புகளை நாம் சந்திக்க வேண்டியி ருக்கின்றது.
எனவே எமது இடர்பாட் டைக் கருத்திற்கொண்டு எமது கட்டுக்க ரைக்குளத்துக்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் பகுதியை மேய்ச்சல் நிலமாக பிரகடனப்படுத்தி அவற்றை உடன் விடு விக்கவேண்டும் என்றனர்.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணை யில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளு மன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மல நாதன். மெசிடோ நிறுவனத்தின் தலைவர். நானாட்டான் முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க அங்கத்த வர்கள். சிவில் சமூக அமைப்பினர். மதத்தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தின் ஒருபகுதியாக மாவட்டச் செயலகத்துக்கு மனுவும் கையளிக்கப்பட்டது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.