எழிலன்
2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்றதுதான் பலஸ்தீனத்தில் இப்போது நடைபெறுகிறது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் பக்க நிகழ்வான கலந்துரையாடலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:- நான் மோசமாக ஒடுக்கப்பட்ட ஒரு சிறு பான்மை சமூகத்தைச் சேர்ந்தவன். பலஸ்தீனத்தில் நடைபெறும் விடயங்கள் ஊடகங்களில் காண்பிக்கப்படுகிறது. அதைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற உயிருக்கு உத்தரவாதமற்ற நிலைதான் தற்போது பலஸ்தீனத்தில் காணப்படுகிறது. நான் கிரிக்கெட் விளையாடத்தொடங்கிய காலத்திலிருந்து 2010ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் வரை இலங்கையிலும் இதே நிலைதான் காணப்பட்டது. யார் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலைதான் காணப்பட்டது- என்றார். (எ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.