ஆதவன்
இலங்கையில் மதவெறி உணர்வை தீவிரமாக பாரதிய ஜனதாக் கட்சி விதைக்கிறது என தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது-
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையை சிங்கள் இனவெறி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அதை ஐ.நா. பேரவை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், உலக நாடுகளும் வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்துக்களுக்காக தொண்டாற்றுகிறோம் எனச் சொல்லும் பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகள்,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடியெடுத்து வைத்து, இன உணர்வை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் மத உணர்வை பரப்பி வருகின்றன.
இந்துக் கோயில்கள் இடிக்கப்படுவதை பா.ஜ.க. பொருட்படுத்தாமல், தமிழ்த் தேசிய இன உணர்வை மங்கச்செய்து, மதவெறிஉணர்வை விதைத்து வருவது வேதனை அளிக்கிறது - என்றார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.