ஹிக்கடுவை கடற்பரப்பில் நீரில் அடித்து செல்லப்பட்ட பிரித்தானிய குடும்பம் ஒன்று அதிஷ்டவசமாக உயிர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ஹிக்கடுவை கடற்பரப்பில் படகு வகை கப்பலை பயணித்துக் கொண்டி கொண்டிருந்த போது கடலில் விழுந்த வெளிநாட்டு சுற்றுலா தம்பதியரையும் அவர்களது இரண்டரை வயது குழந்தையையும் பொலிஸ் உயிர் காப்பாளர்கள் காப்பாற்றியதாக ஹிக்கடுவ சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆபத்தில் இருப்பதைக் கண்ட உயிர் காப்பாளர்கள் உடனடியாக கடலில் குதித்துள்ளனர்.
400 மீட்டர் தூரம் நீந்தி ஆபத்தில் இருந்த பிரித்தானிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதாக அதிகாரிகள் தெரிவி த்தனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.