"தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தமிழர்கள் மட்டுமே விளையாடுவார்கள்."
இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து, எவரோடும் சமரசம் இல்லை, எவரோடும் கூட்டணியும் இல்லை. நோட்டுக்கும், சீட்டுக்கும் எவரோடும் பேரமில்லை. சாவோ, வாழ்வோ தனித்துதான். வெற்றியோ, தோல்வியோ தனித்துதான்.
ஒத்தையடி பாதையில்தான் செல்வேன். 8 வழி சாலையில் செல்வது தி.மு.க. பி.ஜே.பி. தான். சி.எஸ்.கேனு ஒரு கிரிக்கெட் அணி இருக்கிறது. அதுல, ஒருத்தர் கூட தமிழர் கிடையாது.
நாம் ஆட்சிக்கு வந்தால், 11 வீரர்களும் தமிழனாகதான் இருப்பான், உங்க அண்ணனும் வந்து விளையாடுவேன். - என்றார்.
சீமானின் இந்த கருத்து தொடர்பில் இணையவாசிகள் தொடங்கி கிரிக்கெட் ஆர்வலர்கள் வரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். தனியார் அமைப்பு மூலம் நடைபெறும் கிரிக்கெட் போட்டியாகும். இதில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியே சி.எஸ்.கே. அணி விளையாடுகிறது.
எனினும் இதில் தமிழ் வீரர்கள் விளையாடவில்லை. இது பேசுபொருளாகவே உள்ளது.
2023 ஆம் ஆண்டுககான ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. இது பெரும விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.