புதியவன்.
பின்தங்கிய கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற ஆடு வளர்ப்பு திட்டத்தின் மூலம் மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்களை உள்ளடக்கியவாறு சுமார் 75ஆயிரம் பெறுமதியான ஒரு பயனாளிக்கு மூன்று ஆடுகள் வீதம் மன்னர் மாவட்டத்தில் 120 பயனாளிகளுக்கான ஆடுகள் வழங்கும் வேலை திட்டத்தின் கீழ் மன்னார் நகர பிரதேச பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 32 பயனாளிகளில் முதற்கட்டமாக 7பயனாளிகளுக்கான வளர்ப்புக்கான ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இன்று திங்கட்கிழமை(05) கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தானினால் வழங்கி வைக்கப்பட்டது .
மேலும் ஒரு தொகுதியாக 10 பயனாளிகளுக்கான 30 ஆடுகள் மன்னார் மாவட்டச் செயலர் கணேசனினால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட விவசாய பணிப்பாளர் , கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.