(புதியவன்)
பாகிஸ்தானில் ஏற்படக்கூடிய இடையூறுகள் மற்றும் பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்தும் முகமாக தேர்தல் அன்று இணையத்தளம் மற்றும் தொலைபேசி சேவையை நிறுத்த பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது.
வாக்கெடுப்பின் மூலம் ஏற்படக்கூடிய எதிர்பாராத குழப்பங்களுக்கு ஆயத்தமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இதன் மூலம் சுமார் 241 மில்லியன் மக்களைக் கொண்ட பாகிஸ்தானின் உரிமைகள் மீறப்படும் எனவும் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.