ராணி எலிசபெத் பயன்படுத்திய மகிழுந்து- கொள்வனவு செய்த இந்திய தொழிலதிபர்: 
ராணி எலிசபெத் பயன்படுத்திய மகிழுந்து- கொள்வனவு செய்த இந்திய தொழிலதிபர்: 

(புதியவன்)

பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் ராணி பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் மகிழுந்தை இந்திய தொழிலதிபர் யோஹான் பூனாவாலா ஏலவிற்பனையில் கொள்வனவு செய்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு முதல் பக்கிங்ஹாம் அரண்மனையின் ஒரு அங்கமாக இருந்து வந்த ரோயல் ப்ளூ மகிழுந்து தற்போது யோஹான் பூனாவாலா வைத்துள்ளார். எனினும் மகிழுந்தை ஏலத்தில் வாங்கிய தொகையை அவர் வெளியிடவில்லை.

யோஹான் பூனாவல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாகனங்களை கொள்வனவு செய்வது இது முதல் முறையல்ல.

சர்ரேயின் பிராம்லி மோட்டார் மகிழுந்து நிறுவனத்திற்கு சொந்தமான இந்த காரின் விலை 3 லட்சத்து 79 ஆயிரத்து 850 பவுண்டுகள்.

அமெரிக்க முன்னாள் அரசதலைவர் பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல் ஒபாமாவும் தமது பிரிட்டன் பயணத்தின் போது இந்த மகிழுந்திலேயே பயணம் செய்தனர்.

எலிசபெத் ராணிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மகிழுந்து பொதுவாக, பக்கிங்ஹாம் அரண்மனையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் விற்பனைக்கு வைக்கப்படும் போது, ​​இலக்கங்கள் மாற்றப்படுவதில்லை.இதனால், ராணி எலிசபெத் பயன்படுத்திய (OU16 XVH) என்ற பதிவு இலக்கம் கொண்ட அதே வாகனத்தை யோஹான் பூனாவாலா வைத்துள்ளார்.

ராணி எலிசபெத்தின் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரேஞ்ச் ரோவரில் ஒரு இரகசிய ஒளி அமைப்பு, பொலிஸ் அவசர விளக்குகள் மற்றும் வாகனத்திற்குள் நுழைவதற்கு வசதியாக ஒரு அமைப்பு என்பன உள்ளன.

இது கூடுதல் கிராப் கைப்பிடிகளைக் கொண்டுள்ளதுடன் அவை வாகனத்தில் ஏறுவதையும் இறங்குவதையும் எளிதாக்குகின்றன. இந்த மகிழுந்து மேலும் பல வசதிகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாகனம் எந்த சேதமும் இன்றி பாதுகாக்கப்பட்டுள்ளதாக பிராம்லி மோட்டார் மகிழுந்து நிறுவனம் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.(ப)

#uthayannews #newsupdate #todaybreaking #newsupdate #breaking

96 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.