(ஆதவன்)
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைகளைத் தொடர்ந்து, அதிபர் பைடன் வெள்ளை மாளிகையில் நீண்டநேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இஸ்ரேல் மீதான தாக்குதல்களை ஈரான் ஆரம்பித்து சில நிமிடங்களில் இந்த உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டத்தை பைடன் கூட்டியுள்ளார் என்றும் அதில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இஸ்ரேலைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா மேற்கொண்டுவரும் தலையீட்டுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஈரான், இந்த விடயத்தில் அமெரிக்கத் தலையீடு தேவையற்றது என்றும் அமெரிக்கா விலகியிருப்பது அனைவருக்கும் நல்லது எனவும் எச்சரித்துள்ளது. இதே வேளை தான் அரச தலைவராக இருந்திருந்தால் மத்திய கிழக்கில் இந்தப் பதற்றம் ஏற்பட்டிருக்காது என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.