புதியவன்
இலங்கையில் சுதந்திரமாக சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சரியான வேலைத்திட்டம் இல்லாத காரணத்தினால் அச்சம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பணிமனை எச்சரித்துள்ளது.
சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, நாடு முழுவதும் 60 இலட்சத்திற்கும் அதிகமான தெரு நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிவதாக தெரியவந்துள்ளது, மேலும் அந்த நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் திட்டமும் முடங்கியுள்ளதாக சுகாதாரத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும், பொது இடங்களிலும் ஏராளமான நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.
இந்த நிலை தற்போது பாரிய சுகாதார மற்றும் சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் வெறிநோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த காலங்களில் பல்வேறு வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதிலும், அந்த வேலைத்திட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையே இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாகவும் சுகாதார பணிமனை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டில் மாத்திரம் தெருநாய்கள் கடித்து 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலைமையை கட்டுப்படுத்த முறையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சுகாதார பணிமனைகள் தெரிவிக்கின்றன. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.