வஜிர அபேவர்த்தனவின் ஆசை இது!
ஆதவன்
இலங்கை வரலாற்றில் ஐக்கிய தேசியக்கட்சி தோல்வி அடைந்தபோதெல்லாம் இந்நாடும் வீழ்ச்சி கண்டுள்ளது என்பதே உண்மை.
ரணில் விக்கிரமசிங்க 100 இலட்சம் வாக்குகளை இம்முறை பெறுவார் - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
அடுத்த அரச தலைவர் தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய தேசியக் கட்சியால் நடத் தப்பட்ட முதலாவது பொதுக்கூட்டம் ‘நிதர்சனம்' எனும் தொனிப்பொருளின் கீழ் குருநாகல், குளியாப்பிட்டியவில் நடைபெற்றது. அந்தக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் இந்தக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய வஜிர மேலும் தெரிவித்ததாவது:-
பொய்கள் மூலமே ரணில் விக்கிரமசிங்க தோற்கடிக்கப்பட்டார். 2020 பொதுத் தேர்தலின் போதும் உண்மை தோற்கடிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் உண்மை வென்றது. தனிஒருவனாக நிறைவேற்று அரச தலைவர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க தெரிவானார். இது உலகசாதனையாகும்.
இவ்வருடம் ஒக்ரோபர் மாதம் நடைபெறும் அரச தலைவர் தேர்தலில் இலங்கை வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அதாவது 100 இலட்சம் வாக்குகளைப் பெற்ற நிறைவேற்று அதிகார அரச தலைவராக ரணில் விக்கிரமசிங்க வரலாற்றில் இடம்பிடிப்பார் - என்றார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.