(ஆதவன்)
காஸாவின் மிகப்பெரும் மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையை முற்றுகையிட்டுத் தாக்குவதன் மூலம் இஸ்ரேல் போர்நிறுத்தப் பேச்சுகளைக் குலைக்கின்றது என்று ஹமாஸ் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
காஸாவில் உள்ள மிகப்பெரும் மருத்துவமனையும், ஊடகவியலாளர்களின் கேந்திரப் பகுதியாகவும் தற்போது வரை திகழும் அல் ஷிபா மருத்துவமனையை கடந்த மூன்று நாள்களாக இஸ்ரேல் முற்றுகையிட்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதையொரு போர்க்குற்றம் என்று உலக நாடுகள் கண்டித்துள்ளதுடன், மருத்துவமனை வளாகத்தில் இருந்து இஸ்ரேலியப் படைகள் உடன் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. எனினும் இந்த அழுத்தங்களுக்குப் பணிவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள இஸ்ரேல், துல்லியமான உளவுத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்றும் மருத்துவமனையில் நோயாளர்களை விடவும் ஹமாஸின் தலைவர்களே அதிகமுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே அல் ஷிபா மருத்துவமனையை முற்றுகையிட்டுத் தாக்குவதன் மூலம் இஸ்ரேல் போர்நிறுத்தப் பேச்சுகளை குலைக்கின்றது என்று ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானியே குற்றம் சுமத்தியுள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.