ஆதவன்.
பலஸ்தீனத்தை ஐ.நா. உறுப்பு நாடாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்வது தொடர்பான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு எதிரான மோதலையடுத்து, பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த சுதந்திரப் பலஸ்தீனமே சிறந்த வழி என்று அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளன. இலங்கை, இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளும் இந்த முடிவுக்குத் தமது இணக்கத்தையும் வரவேற்பையும் தெரிவித்திருந்தன.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே. பலஸ்தீனத்தை ஐ.நா. உறுப்பு நாடாக அங்கீகரித்து ஏற்றுக் கொள்வது தொடர்பான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. 'இஸ்ரேல், பலஸ்தீனம்' என்ற இருநாட்டுக் கொள்கையை அமெரிக்கா திரும்பத்திரும்ப வலியுறுத்தி வந்தாலும், இஸ்ரேலின் ஆதர வில்லாமல் இதைத் தீர்வாக செயலாளர், திணிக்கமுடியாது என்றும் அவ்வாறான செயற்பாடுகளை அமெரிக்கா எதிர்க்கும் எனவும் அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்துள்ள பின்னணியில், இந்தத் தீர்மானத்துக்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை அமெரிக்கா பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகின்றது. பலஸ்தீனம் உருவாக்கப்பட்டால், அந்த நாட்டுக்கென தனியான இராணுவம் உருவாகும். பின்னர் பலஸ்தீன இராணுவத்துடன் அரபு நாடுகள் கூட்டணிகளை அமைத்தால் அது பிராந்தியத்தில் இஸ்ரேலின் இருப்பை இல்லாமற்செய்யும் என்பதே சுதந்திர பலஸ்தீனத்தை இஸ்ரேல் எதிர்ப்பதன் பிரதான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.