(புதியவன்)
ஐ.பி.எல் 2024 தொடர் நாளை (22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் நடப்பு சம்பியன் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன.
இந்த நிலையில் ஐபிஎல் 2024 தொடரில் புதிய மாற்றங்களை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
அதன்படி ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட் தொடர்கள் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஒரே ஓவரில் இரு பவுன்சர்கள் வீசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது கடைசி ஓவர்களை வீச வரும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதேபோல ஒரு பேட்ஸ்மேன் ஸ்டெம்பிங் ஆனாரா என மூன்றாவது நடுவர் முடிவு எடுக்கும்போது, முதலில் அவர் கேட்ச் ஆனாரா என சரிபார்க்கப்படும் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டை போல வைட், நோ போல் போன்றவைகளையும் அணிகள் விமர்சனம் செய்யலாம் என்றும்,
ஒரு இன்னிங்சில் ஓர் அணிக்கு 2 ரிவியூ வழங்கப்படும் எனவும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
மேலும், ஐ.சி.சி புதிதாக அமூல்படுத்தியுள்ள ஸ்டொப் முறை ஐ.பி.எல் தொடரில் அறிமுகப்படுத்தப்படவில்லை எனவும் பி.சி.சி.ஐ கூறியுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.