ஆதவன்.
கச்சதீவை மீட்பது தொடர்பில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் எந்தவொரு வாக்குறுதியும் இல்லை என்று பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி வெளியிட் டுள்ளன. இந்திய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கச்சதீவை முன்னிலைப்படுத்தி தனது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்தது.
கச்சதீவை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக மீனவ சமூகத்தில் மேற்கொண்ட பரப்புரைகளிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கச்சதீவு மீட்புத் தொடர்பில் பா.ஜ.க. எதையும் குறிப்பிடவில்லை. இதற்கு பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் ஆதரவளித்து கூட்டணி அமைத் துள்ள கட்சிகள் தங்களின் அதிருப்தி யைத் தெரிவித்துள்ளன.
கச்சதீவு மீட்பு என்பது சாத்தியமற்ற விட யம். சீனாவின் ஆக்கிரமிப்பை இருட்டடிப்புச் செய்வதற்காகவும், உணர்வுக ளைத் தூண்டித் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்வதற்காகவுமே பா.ஜ.க. கச் சதீவு விடயத்தைக் கையிலெடுக்கின்றது. இது தமிழக மற்றும் ஈழ மீனவர்களிடையே தேவையற்ற மனக்கசப்புக்களையும் தோற்றுவிக்கின்றது என்று பலரும் பா.ஜ.க.வுக்கு தொடர்ச்சியாகத் தமது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.