(ஆதவன்)
வவுனியா- தோணிக்கல், ஆலடி வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து ஆணொருவர் நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ரங்கசாமி நேசரத்தினம் (வயது- 43) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு நேற்றுமுன்தினம் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அயலவர்கள் அம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
எனினும், அவர் சிகிச்சைக்குச் செல்ல மறுப்புத் தெரிவித்திருந்தார். இதையடுத்தே அவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.