(புதியவன்)
நாடாளுமன்ற பணியாட்கள் தொகுதியின் விளையாட்டு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தின் பணிமனைகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி (பி.பி.எல்) சனச காப்புறுதி நிறுவனத்தின் முழுமையான ஆதரவுடன் 2024 மார்ச் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 8.00 மணிக்கு பத்தரமுல்லை ஜீ.எச்.புத்ததாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவின் பங்குபற்றுதலின் கீழ் இந்த கிரிக்கட் சுற்றுப்போட்டி நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற பணியாட்கள் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கிய அணி என்பன இந்தக் கிரிக்கெட் போட்டியில் பங்கெடுக்கவுள்ளன. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.