அரசதலைவர் விளக்கம்
ஆதவன்.
போராட்டம் என்ற போர்வையில் வன்முறையை விதைப்பவர்கள் மீது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சட்டத்தையும் ஒழுங்கையும் மேற்கொள்வதற்காக எடுக்கப்படும் நடவ டிக்கைகள் மனித உரிமை மீறல் என்றுவிட்டு, சில நடவடிக்கைகளை எடுக்காதிருந்தால் இன்று நாட்டில் உறுதித்தன்மையை ஏற்படுத்தியிருக்கமுடியாது என்றும் அரசதலைவர் சுட்டிக்காட்டினார். அரசதலைவர் அலுவலகத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சந்திப்பின்போதே அரசதலைவர் ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"நாட்டுக்குப் புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது. பரீட்சைச்சுமையைக் குறைத்து பாடசாலைக் கல்வியில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. 2035ஆம் ஆண்டளவில் நாட்டில் உயர்தரத்தி லான கல்வி முறையை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.
கடினமான மற்றும் விரும்பத்தகாத யுகத்தின் பின்னர் ஒரு நாடாக முன்னோக்கிச் செல்லும் பயணத்தில் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க இடமளிக்கக்கூடாது. ஒவ்வொரு துறையிலும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு சகலதரப்பினருக்கும் உண்டு” என்றும் விரிவுரையாளர்களிடத்தில் அரசதலைவர் மேலும் தெரிவித்தார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.