புதியவன்
களுத்துறை பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் குழு ஒன்று தடுப்பூசி போடப்பட்ட பின்னர் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 10 மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக நாகொட மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
12 மற்றும் 13 வயதுடைய பாடசாலை மாணவர்களே இவ்வாறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு மயக்கம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.