நரியை கொக்கு விருந்துக்கு கூப்பிட்ட கதை தெரியுமெல்லோ.நரி வழக்கமா தட்டையான கோப்பையிலதான் சாப்பிடும், அந்த நினைப்பில கொக்குக்கும் தட்டையான கோப்பையில சாப்பாட்டைக் குடுத்திருக்கு. ஆனால் கொக்கின்ர சொண்டு தட்டையான கோப்பையில சாப்பிட வளமிருக்காது. அதால கொக்கு சாப்பிடாமலே போட்டுதாம். அப்பிடி சாப்பிடுற விதம்கூட ஆளாளுக்கு. இனத்துக்கு இனம், நாட்டுக்கு நாடு வேற வேறயாத்தான் இருக்கும். அதை விளங்கிக் கொள்ளாமல் 'நாங்கள் சாப்பிடுறமாதிரித்தான் நீங்களும் சாப்பிடவேணும் எண்டு வில்லங்கத்துக்கு ஏதும் திட்டத்தைக் கொண்டுவந்தால் அந்தத் திட்டத்தால ஒரு நன்மையுமில்லை.
இப்ப பள்ளிக்கூடப் பிள்ளையளுக்கு ஒவ்வொரு நாளும் காலைமைச் சாப்பாடு போடுற திட்டத்தில ஒரு மாற்றத்தை அரசாங்கம் கொண்டு வந்திருக்கு. அதின்படி ஒவ்வொரு பிள்ளைக்கும் அரசாங்கம் காலைமைச் சாப்பாட்டுக்கெண்டு IIO ரூபா ஒதுக்கும். அரிசி, பருப்பு. மீன்ரின் எண்டதுகளையும் அரசாங்கமே குடுக்கும். அரிசிக்கு 14 ரூபாவும். பருப்புக்கு 6 ரூபாவும், மீன் ரின்னுக்கு 5 ரூபாவும் எண்ட கணக்கில ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒதுக்கின IIO ரூபாயில கழிப்பினம். சைவப் பள்ளிக்கூடங்களுக்கு மீன்ரின் குடுக்காததால அவைக்கு அரிசிக்கும். பருப்புக்கும் சேர்த்து 20 ரூபா கழிப்பினம். இப்பிடி அரசாங்கம் குடுக்கிற சாமானுக்கு கழிச்சது போக மிச்சமுள்ள காசிலதான் பள்ளிக்கூடக்காரர் விறகு, கூலி, மரக்கறி, தூள்,உப்பு எண்டு எல்லாத்தையும் வாங்கோ ணும். எண்டாலும் இந்தக் காசில பிள்ளைக்கு சாப்பாடு குடுக்கக்கூடியதாத்தான் இருக்கு.
ஆனால் என்னதான் பேரினவாதிகளும், படைத் தரப்பும் பகீரதப் பிரயத்தனம் செய்து உரிமைக்கான தகிப்பை இல்லாமல் செய்ய முயன்றாலும், தமிழர்களின் மரபணுவில் அது இரண்டறக் கலந்துவிட்டதால், ஏதோ வொரு வகையில் பீறிட்டுக் கிளம்பவே செய்தது. இம்முறை பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் டாங்கி, வெடுக்குநாறிமலை ஆக்கிரமிப்பு, துயிலுமில்லம், கார்த்தி கைப்பூ என்று எங்கள் நிலத்தின் நினைவுகளை மாணவர்கள் ஆக்கவடிவில் வெளிக்கொணர்ந்திருந்தனர். போருக்குள் பிறந்த ஒரு சந்ததி, தான் கண்டு, கேட்டு, உண்டுயிர்த்து, உற்றுணர்ந்து கற்றவற்றை ஓர்ஆக்கவடிவில் வெளிப்படுத்தியதில் தவறொன்றுமில்லையே. ஆனால் பாடசாலைகளில் உயிர்கொல்லும் போதைப் பொருள் கள் விற்பதைக் கண்டும்காணாமல் ஊக்குவித்த அரசாங் கத்துக்கு இந்தப் படைப்புகள் கண்ணைக் குத்தியிருக் கின்றன. பாடசாலை முதல் வீடுவரை விசாரணைகள் நீள்கின்றன. 'குய்யோ முறையோ' என்று சிங்கள -பௌத்த பேரினவாத அமைப்புகள், மாணவர்களின் இந்தப் படைப்பாக்கங்களை பயங்கரவாத முத்திரை குத்தி கடிதங்களை எழுதித் தள்ளுகின்றன. நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்க, ஒன்றுமேயில்லாத இதுபோன்ற மாணவர் படைப்புகளை பிரச்சினையாக்க நினைப்பது அபத்தமே. ஆனால் அதைப் பேரினவாதிகளோ, இலங்கை அரசோ, அரச படைகளோ புரிந்து கொள்ளவே போவதில்லை. அப்படிப் புரிந்துகொள்ளாத வரையில் இந்த நாடு உருப்படவும் போவதில்லை.
(03.04.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.