செல்வன்
தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சி முகாம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னக்கோனால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு பாதுகாப்புப் படை கட்டளைத் தலைமையகத்தின் கீழ் நந்திக்கடல் பகுதியில் உருவாக்கப்பட்ட இராணுவப் படையணி பயிற்சிப் பாடசாலையானது தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சிப் பாடசாலையாக அமைப்பதற்காக இராணுவத்தினரால் தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
இதற்கிணங்க, இப்பயிற்சிப் பாடசாலையை தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சிப் பாடசாலையாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னக்கோன் இன்று திறந்து வைத்தார்.
ஏற்கனவே பல்வேறு இடங்களில் பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு இதன்போது சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், கல்விப் பணிமனை அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், வடக்கு - கிழக்கைச் சேர்ந்த பல பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.