கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெண் ஈ தாக்கம் அதிகரித்து காணப்படுவதாகவும் தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர் அந்த வகையில் அன்றைய தினம் 08.04.2024 கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பழைய வட்டக்கச்சி பகுதியில் தனியார் ஒருவரது காணியில் தென்னை முற்றும் முழுதாக வெண் ஈ தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது வீட்டில் பயன் பெற்று வந்த வாழை மற்றும் பூ மர வகைகள் தோடை எலுமிச்சை வாழை மற்றும் நாளாந்தம் பயன்படுத்தும் தண்ணீர் கூட பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் வெண் ஈ தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளதாகவும் தரையில் வரும் புற்களில் கூட பரவி சுவாசிக்ககூட முடியாத நிலையில் வெண் ஈ தாக்கம் அதிகரித்து கானப்படுவதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் நேரில் வந்து பார்வையிட்டு எமக்கு உரிய தீர்வினை பெற்று தர வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார் மேலும் தெரிவிக்கையில் இவ் வெண் தாக்கத்தின் காரணமாக இத்தண்ணீரை பயன்படுத்துவதால் தமக்கேதும் நோய் தாக்கம் ஏற்படலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தமது கிணற்றில் உள்ள தண்ணீரை பலர் நாளாந்த தேவைக்காக பயன்படுத்தி வருவதாகவும் எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.