முன்னாள்அரசதலைவர்களின் பயன்படுத்திய அறுபதுக்கும் மேற்பட்ட அதிசொகுசு வாகனங்கள் மூலம் 200 கோடி ரூபாவுக்கும் அதிகமான வாடகைப் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்றும், தற்போது அவற்றுள் இரண்டு வாகனங்கள் காணாமற் போயுள்ளன என்றும் ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவிக்கையில்,
இந்த வாகனங்களுக்கு அரசதலைவர் செயலர்களே பொறுப்பு என்பதால். இது தொடர்பான வழக்கு அரசதலைவர் செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் 2006ஆம் ஆண்டு முதல் மூன்று அரசதலைவர் பயன்படுத்தியுள்ளனர். இந்த வாகனங்கள் இலங்கையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்திடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்டுள்ளன. எந்தெந்த அரசதலைவர் வாகனங்களைப் பயன்படுத்தினார்கள்? எவ்வளவு பணம் செலுத்த வேண்டியிருந்தது? வாகன இலக்கங்கள் உள்ளிட்ட தகவல்கள் எதிர்காலத்தில் ஊடகங்கள் ஊடாக பகிரங்கப்படுத்தப்படும். பணம் செலுத்தத் தவறியதால், செலுத்தப்படாத தொகைக்கு 3 தொடக்கம் 4 வீதமான மாதாந்திர வட்டி வசூலிக்க சம்பந்தப்பட்ட வாகன நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. வரவு-செலவு திட்டம் சமர்ப்பித்தபோது முன்னாள் அரசதலைவர்கள் என்ன செய்தார்கள்? என்பதில் சிக்கல் இருக்கின்றது என தற்போதைய அரசதலைவர் கூறியிருந்தார். இது தொடர்பான தகவல்கள் எதிர்காலத்தில் பகிரங்கப்படுத்தப்படும்-என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.