(புதியவன்)
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் நாளை (14), 75 மில்லி மீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் பணிமனை எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என பணிமனை தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சில நேரங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்.
அதேநேரம், மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் பணிமனை, பொது மக்களிடம் கோரியுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.