(புதியவன்)
மலரந்துள்ள குரோதி வருடத்தினை வரவேற்று மலையக ஆலயங்களில் நேற்று (13) திகதி நள்ளிரவு முதல் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு ஆசி வேண்டி பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வருடம் மலந்துள்ள குரோதி வருடம் அனைத்து குரோதங்களும் நீங்கும் வருடங்களாக அமைந்துள்ளதனால் அனைவரது உள்ளத்திலும் குரோதங்கள் நீங்கி சாந்தி சமாதான சகவாழ் இடம்பெற்று நாடும் நாட்டு மக்களும் வளம் பெற வேண்டும் என இன்று (14) காலை மலையக ஆலயங்களில் இடம்பெற்ற சிறப்பு சித்திரை புத்தாண்டு பூஜையின் போது பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.
ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் சிறப்பு பூஜை வழிபாடுகள் ஆலய பிரதம குரு பிரம ஸ்ரீ சந்திராநந்த சர்மா தலைமையில் இடம்பெற்றது.
இதில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு நலம் வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன்.பக்தர்கள்,புத்தாடை அணிந்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.