இரு பெண்கள் சாவு, இருவர் காயம்
(புதியவன்)
பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலி-எல பகுதியில் மகிழூந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
புத்தாண்டை முன்னிட்டு ஹாலி-எல பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்த வேளையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இந்த விபத்தைச் சந்தித்துள்ளனர்.
தொம்பே, புவக்வத்தை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய பெண் மற்றும் 51 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
53 வயதுடைய தந்தையும் 22 வயதுடைய மகளும் பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.