புதியவன்
நுவரெலியா - மீபிலிபான 'அபி யூத்' இளைஞர் அமைப்பால் நுவரெலியா மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம் இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வில் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்றார்.
பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு அமைவாக இடம்பெற்ற இந்நிகழ்வில், விளையாட்டு மற்றும் கலாசார அம்சங்கள் பலவும் உள்ளடக்கியிருந்தன.
புத்தாண்டு நிகழ்வு நடைபெற்ற இடத்துக்கு வருகை தந்த அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க சில போட்டிகளைக் கண்டுகளித்த பின்னர், அங்கு இடம்பெற்ற உந்துருளி போட்டியில் வெற்றி பெற்றவர்களும் பரிசுகளை வழங்கினார்.
சித்திரைப் புத்தாண்டு நிகழ்வைக் கண்டுகளிக்க வந்த பிரதேச மக்களுடன் சிநேகபூர்வமாகக் கலந்துரையாடியதோடு, அப்போது மக்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தருவதாக அரச தலைவர் உறுதியளித்தார்.
அதற்கு இணையாக நாடளாவிய ரீதியிலுள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இம்முறை தமிழ் - சிங்களப் புத்தாண்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த வருடத்தை விடவும் இம்முறை அதிகளவில் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள் ஏற்படு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
நுவரெலியா - மீபிலிபான சித்திரைப் புத்தாண்டு நிகழ்வில் சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ வும், பிரதேச அரசியல்வாதிகள் சிலரும் கலந்து கொண்டனர்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.