(புதியவன்)
இந்திய மாணவர் ஒருவர் கனடாவில் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 12ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த 24 வயதுடைய சிராக் என்ற மாணவர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான்கூவரில் வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மகிழுந்தில் இருந்து உயிரிழந்த நிலையில் மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.
கடந்த 2022 ஆம் ஆண்டு உயர் கல்விக்காக சிராக் கனடா சென்றுள்ளார். இந்நிலையில், சிராக்கின் உயிரிழப்புக்கு குடும்பத்தினர் நீதி கோரியுள்ளனர்.
மேலும், உடலை இறுதிச் சடங்குகளுக்காக சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறும் இந்திய அரசாங்கத்திடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாணவரின் சாவை வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டதை மிகுந்த வேதனையுடன் அறிந்துள்ளதாகவும். இது தொடர்பாக மேலதிக தகவலுக்கு கனேடிய அதிகாரிகளை அணுகியுள்ளதாகவும்," தூதரகம் அறிவித்துள்ளது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.