மாதவன்.
வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்கரையில் சட்டவிரோதமான கடற்றொழில் ஈடுபட்டதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான கடற்றொழிலான இலை, குழைகளை கடலில் இட்டி கணவாய் மீனை பிடிப்பதற்க்காக இலை குழைகளை படகில் ஏற்றிச்சென்ற இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தாளையடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.