யோகி.
யாழ். வடமராட்சி கிழக்கு வீடொன்றில் கஞ்சா போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 36 வயதுடைய இரு சந்தேகநபர்கள் 30kg, 500g போதைபொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா பொலிஸ் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு அன்று நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை கிடைக்கப்பெற்ற தகவலின்படி வவுனியா பொலிஸ் போதைபொருள் ஒழிப்புபிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் றிஸ்வி தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டு மருதங்கேனி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மருதங்கேனி பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுவருவதுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் இன்று திங்கட்கிழமை கிளிநொச்சி நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.