(பட்சி)
வழக்கமா தமிழரசுக் கட்சியின்ர பதவியளுக்கு பெரிசா போட்டி வாறேலை. மத்திய குழுவில வைச்சு ஆராருக்கு என்னென்ன பதவி எண்டு முடிவெடுத்துப்போட்டு. அதைப் பொதுச்சபையில போட்டு ஒராள் முன்மொழிய, இன்னொராள் வழிமொழியிறதோட விசயம் முடிஞ்சிடும். இவ்வளவுநாளும் இதுதான் வழக்கமா இருந்ததால அதேமாதிரி இந்தமுறையும் மத்தியகுழுக் கூட்டம் ஒண்டை நடத்தி, தங்களுக்கு ஏத்த ஆக்களின்ர பேரை ஒவ்வொரு பதவியளுக்கும் போட்டிட்டு, வாக்கெடுப்பு இல்லாமல் அவையைக் கொண்டு வந்திடலாம் எண்டதுதான் யாழ்ப்பாணத்தில உள்ள அந்த ஹொட்டலில ரூம் போட்டு யோசிச்சவை எடுத்த முடிவு. ஒருவேளை தாங்கள் கொண்டந்த பட்டியலை பொதுச்சபைக்காரர் ஏற்காட்டி, அதைவைச்சே ஒரு குழப்பத்தை எடுக்கலா மெண்டது அவையின்ர மாற்றுப் பிளான்.
ஆனால் அதிலயும் அவைக்கு ஒரு சிக்கல். முதலே மத்தியகுழுவைக் கூட்டி, தாங்கள் நினைச்ச ஆக்களை பதவியளுக்குப் பிரேரிச்சா எப்பிடியும் அதை எதிர்க்க எதிர்க்கன்னைக்கு அவகாசம் கிடைச்சிரும். அப்பிடி அவை ஆக்களைக் கூட்டிக்கொண்டுவந்தால், தங்கட திட்டமெல்லாம் பாழாயிடும் எண்டதும் அவைக்குத் தெரியும். அதால இன்னொரு பிளான் போட்டிச்சினம். எப்ப பொதுச்சபைக்கூட்டம் நடக்குதோ அண்டைக்கு விடிய திடீரெண்டு மத்தியகுழுக் கூட்டத்தை வைச்சால், எதிர்க்கன்னை அதைச் சமாளிக்க ஏலாமல் தங்கட பக்கம் வரத்தானே வேணும். அதின்படி வெள்ளிக் கிழமை பொழுதுபடேக்கதான் கட்சியின்ர நிர்வாகச் செயலாளர் மத்தியகுழுக்காரருக்கு போன் எடுத்து 'நாளைக்கு விடிய 10 மணிக்கு மத்தியகுழுக் கூட்டம் இருக்கு' எண்டு அறிவிச்சிருக்கிறார். உண்மையில பொதுச்செயலாளருக்குத்தான் அப்பிடிக் கூட்டங்களுக்கு உறுப்பினர்மாரைக் கூப்பிடுற அதிகாரம் இருக்கு.ஆனால் ரண்டு மூண்டு கிழமையா பொதுச் செயலாளரின்ர சிலமனையேகாணேலை. கேட்டால் வருத்தம் எண்டு சொல்லுப்படுகுது. அதைவிடப் பகிடி என்னெண்டா இந்தப் பொதுச்சபைக் கூட்டம் நடக் கிறதுக்கு முதல் கிழமைதான் தலைவர் தெரிவு நடந்தது.அதுக்குமுதலும்ஒருமத்தியகுழுக்கூட்டத்துக்கு நாலைஞ்சு நாளைக்கு முதலே அறிவிச்சிருந்தவை. ஆனால் பொதுச்செயலாளருக்கு சுகமில்லை எண்டு சொல்லி அந்தக் கூட்டத்தை கான்சல் பண்ணிப் போட்டினம். இப்பவும் அவருக்கு வருத்தம் மாறேலை எண்டு சொல்லுப்படுகுது. அப்பிடியிருந்தும் திண்ணையில படுத்தவனுக்கு திருக்கெண்டு கலியாணம் நடந்தமாதிரி உந்த மத்தியகுழுக்கூட்டத்தையும் திடீரெண்டு முதல் நாள் இரவே அறிவிச்சு. அருத்தநாள் விடிய நடத்தினவை. அதிலதான் தங்கட பக்க ஆக்களை பட்டியலுக்குள்ள போட்டிட்டு, அதை எல்லாரும் ஏற்கோணும் எண்டு சொல்லுப்பட்டிருக்கு. கட்சி உடையக்கூடாது எண்டதுக்காக கனபேர். ஒருமாதிரி அரைகுறை மனதோட சம்மதிச்சவையாம்.
பிறகு அந்த மத்தியகுழுக்கூட்ட முடிவை பொதுச் சபை எதிர்க்க. ஏற்கனவே பிளான் பண்ணினபடி குழப்பத்தைப்பெருசாக்கி இருக்கினம் ஹொட்டலுக்குப் போய் திட்டம்போட்ட குருப். அண்டையான் கூட்டத்தில குழப்பம் தானாவரேலை, வலிஞ்சுதான் உருவாக்கினவை எண்டது இப்ப விளங்குதோ?
30.01.2024 உதயன் பத்திரிகை
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.