பாப்பரசரின் முயற்சி தோல்வி
(ஆதவன்)
உக்ரைனுடன் அமைதிப் பேச்சுகளில் ஈடுபடுமாறு மன்றாட்டமாகக் கேட்கின்றேன் என்று பாப்பரசர் பிரான்ஸிஸ் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அந்தக் கோரிக்கைகளை ரஷ்யா அடியோடு நிராகரித்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான மோதல் தொடர்பில் அண்மையில் பாப்பரசர் பிரான்ஸிஸ் தனது கருத்துகளை வெளியிட்டிருந்தார். உக்ரைனின் அண்மைக்காலப் பேரழிவுகள் தொடர்பில் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்திருந்த பாப்பரசர், உக்ரைனில் அமைதியைக் கொண்டு வருவதற்காக அனைத்து நாடுகளும் முயற்சிக்க வேண்டும். ரஷ்யா உலக அமைதி தொடர்பில் கரிசனை கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையிலேயே, பாப்பரசருடைய கோரிக்கையைத் திட்டவட்டமாக நிராகரித்தது ரஷ்யா. 'உக்ரைனின் அதிபர் ஷெலன்ஸ்கியிடம் சரணடைய மாட் டோம்' என்று தெரிவித்துள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சர், ஒருதலைப் பட்சமான அமைதிக்கான முயற்சிகளை நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.