(புதியவன்)
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது. அங்கு கடுமையான சட்டங்கள் அமுலில் உள்ளன.
கம்யூனிஸ் ஆட்சி இருந்தாலும், மோசடியும், ஊழலும் வியட்நாமில் அதிகமாக இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் வைப்பக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக வியட்னாமியப் பெருஞ்செல்வந்தரான டுரோங் மை லானுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சாவு தண்டனை விதித்துள்ளது.
வியட்நாமின் மிகப்பெரிய வைப்பகங்களில் ஒன்றாகக் கருதப்படும் சைகோன் வணிக வைப்பகத்தில் இருந்து பணத்தை மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது
சுமார் 304 டிரில்லியன் டோங் (12.46 பில்லியன் டொலர்) பணத்தைக் கையாடியதாக டுரோங் மை லான் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சொத்து மேம்பாட்டு நிறுவனமான வேன் தின் ஃபாட் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் தலைவியாக லான் பதவி வகித்தவர்.
நிதி கையாடல், ஊழல், வங்கி விதிமுறைகளை மீறியது ஆகிய குற்றங்களில் லான் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டது.
எந்த தீர்ப்பை எதிர்த்து லான் மேல்முறையீடு செய்வார் என்று அவரது குடும்ப உறுப்பினர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.