சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவி என்னிடம் வழங்கப்பட்டாலும் அதனைப் பொறுப்பேற்பதற்குத் தயாரில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சிக்குள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உட்கட்சி மோதல்கள் தீவிரம் பெற்றுள்ளன. இதனால் சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவி தொடர்பில் தீவிரமான கருத்துப் பகிர்வுகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
'சந்திரிகா அம்மையார் நீண்ட காலம் அரசியல் செய்தவர் எனவே, சுதந்திரக்கட்சியில் அவர் போஷகர் என்ற பதவி நிலையில் இருக்கவேண்டும். அந்தப் பதவியில் இருந்து தேவையான ஆலோசனைகளை வழங்கலாம். மைத்திரிபால சிறிசேன பற்றி என்னிடம் எதுவும் கேட்கவேண்டாம். அவர் பற்றி கருத்து வெளியிட்டு எனது நேரத்தை வீணடிக்கத் தயாரில்லை. அதேவேளை, மே தினக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் செல்வதற்கு நான் தயாரில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் களனி அமைப்பாளர் என்ற வகையில் அந்தக் கட்சியின் மே தினக் கூட்டத்திலேயே பங்கேற்பேன் எனவும் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.