ஆதவன்.
பாதாள உலகக் குழுக்களை ஒடுக்குவதற்காக கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இதுவரை 544 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதாள உலகச் செயற்பாடுகளை ஒடுக்குவதற் காக 20 பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
இந்தச் சுற்றிவளைப்பில் நேற்றுமுன்தினம் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணினார்கள் எனச் சந்தேகிக்கப்படும் 9 பேர் கைதாகியுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.