ஆதவன்.
அரசதலைவர் தேர்தலுக்காக கட்சிகள் பலவும் தீவிரமாகச் செயற்பட்டுவரும் நிலையில் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என்று அரசியல் களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அநுரகு மார திஸாநாயக்க, திலித் ஜயவீர, விளையாட்டுத் துறை முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, அரசதலைவர் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தொழிலதிபர் ஜனக ரத்நாயக்க மற்றும் முன்னாள் அரசதலைவர் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் பேரன் இஷான் ஜயவர்த்தன உள்ளிட்ட 7 பேர் போட்டியிடத் தீர்மானித்துள்ளனர்.
அதேவேளை, சுதந்திரக் கட்சியும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவேண்டும் என அந்தக் கட்சியின் பதில் தலைவரும், நீதித்துறை அமைச்சருமான விஜயதாஸ ராஜபக்சவின் பெயரை முன்வைத்துள்ளது. எதிர்வரும் காலங்களில் அரசதலைவர் தேர்தலில் மேலும் பல வேட்பாளர்கள் இணையவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அரசதலைவர் தேர்தலுக்கு அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்களின் பெயர்கள் முன்வைக்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.