மாதவன்.
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆவரங்கால் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிகா (வயது 05) என்ற மூளை காய்ச்சலால் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(28) பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்;
குறித்த சிறுமிக்கு கடந்த திங்கட்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் அச்சுவேலி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் காய்ச்சல் சுகமானது.
பின்னர் வெள்ளிக்கிழமை மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை மீண்டும் அச்சுவேலி மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. பின்னர் கோயில் ஒன்றுக்கு கொண்டு சென்று நூல் போடப்பட்டது.
பின்னர் திடீரென சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அச்சுவேலி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வேளை சிறுமி உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான சாவு விசாரணைகளை திடீர் சாவு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சிறுமியின் சாவுக்கான காரணம் மூளைக் காய்ச்சல் என உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.