களுத்துறையில் 16 வயது பாடசாலை மாணவியின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உட்பட நான்கு சந்தேகநபர்களிடம் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக குற்றப்புலனாய்வுத்திணைக்களம் எதிர்வரும் நாட்களில் களுத்துறை சிறைச்சாலைக்குச் செல்லவுள்ளதாக குற்றப்புலனாய்வுத்திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
களுத்துறை நீதவானின் விசேட அனுமதியுடன் இந்த வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவியை விடுதிக்கு அழைத்து வந்த அவரது தோழி மற்றும் அவரது காதலன், பிரதான சந்தேகநபர், வாகன சாரதி ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளது.
குறித்த நால்வரை தொடர்ந்து தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள விடுதியின் வரவேற்பாளரிடமும் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.