ரணிலுக்கு டிலான் அறிவுரை
(ஆதவன்)
ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சக்களின் பக்கம் நிற்கும் வரையில் அவரால் வடக்கு மற்றும் மலையகத் தமிழர்களின் ஆதரவைப் பெறமுடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:-
நாட்டில் உள்ள வாக்காளர்களில் 40 வீதமானோர் யாருக்கு வாக்களிப்பது என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை. 60 சதவீத வாக்குகளை வைத்துத்தான் கருத்துக் கணிப்புகள் வருகின்றன. அது உறுதியான முடிவாக அமையாது.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள், ராஜபக்சக்களுடன் ரணில் விக்கிரமசிங்க இருக்கும்வரை அவருக்கு ஆதரவு வழங்கமாட்டார்கள். அதனால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள மக்களுள் பெரும்பாலானவர்கள் ஐக்கிய மக்கள் சக்தி பக்கம் தான் தற்போது நிற்கின்றனர். ரணில் விக்கிரமசிங்க எப்படி தான் முயற்சித்தாலும் ராஜபக்சக்களுடன் இருக்கும் வரை அவரின் முயற்சி வெற்றியளிக்காது.
தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் என்னைப் போன்ற அரசியல்வாதிகளுக்கு வரவேற்பு உள்ளது. அந்த மக்களின் உரிமைக்காக முன்னின்றவன் நான். அதனால் சிங்களப் புலி என்று கூட முத்திரை குத்தினர் - என்றார்.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.