ரஷ்ய படைகளுக்கு எதிரான உக்ரைன் இராணுவத்தின் தாக்குதல்கள் பல முனைகளில் மிகக் கடுமையாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
ஆரம்பகட்ட நடவடிக்கைகளின் போது, கடுமையான இழப்புகள் உக்ரைன் படைகளுக்கு ஏற்பட்டதாக கூறப்படும் அதே நேரம், ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த உக்ரைனின் சில கிராமங்களை உக்ரைன் படைகள் விடுவித்துள்ளதாகவும், அறிய முடிகிறது.
மிகப்பெரிய உலக வல்லரசான ரஷ்யாவுடன் உக்ரைன் போன்ற சிறிய தேசம் போரிடுகின்ற போது, இழப்புகள் ஏற்படுவதென்பது தவிர்க்கமுடியாத ஒன்று. அதுவும் முன்னேறித் தாக்க உக்ரைன் படை ஈடுபடும் சந்தர்ப்பத்தில், தளம் அமைத்தபடி நிலையெடுத்துக் காத்திருக்கும் ரஷ்ய படைகளால் இழப்புகளை ஏற்படுத்துவது என்பது சாதாரணமான ஒன்று.
அடுத்துவருகின்ற நாட்களில் களமுனைகளில் வருகின்ற மாற்றங்கள் தான் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற யுத்தத்தின் போக்கை தீர்மானிக்கும் எனக் கூறுகின்றார்கள் போரியல் நோக்கர்கள்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.