மும்பையில் 100 பெண்களுக்கு ஆபாச தொல்லை கொடுத்து வந்தவர் ஒரு ஆண்டுக்கு பிறகு பொலிஸாரிடம் சிக்கினார். மும்பையில் ஆடை வடிவமைப்பாளராக இருந்த பெண் ஒருவருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து ஆபாச வீடியோ, குறுந்தகவல் வந்தது. இதனால் அவர் பொலிஸாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் படி பொலிஸார் நம்பரை கொண்டு விசாரணை நடத்தியதில் பேஷன் டிசைன் கடையில் உதவியாளராக வேலை பார்த்த கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் சுவாமி (வயது45) என்பவர் என தெரியவந்தது. இவர் அங்கு வேலை பார்த்து வரும் மற்ற பெண்களுக்கும் ஆபாச வீடியோ அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததால் உரிமையாளர் ராஜ்குமார் சுவாமியை வேலையில் இருந்து நீக்கம் செய்து உள்ளார். 100 பெண்கள் பாதிப்பு இதைத்தவிர மும்பையில் 100 பெண்களுக்கு அழைப்பு விடுத்து ஆபாச தொல்லை கொடுத்து உள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. அவரை பிடிக்க பொலிஸார் தேடிய போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தால் சிரமம் ஏற்பட்டு வந்தது. கடந்த வாரம் அவரது செல்போன் சிக்னல் புனேயில் இருப்பதாக காட்டியது. இதனை தொடர்ந்து பொலிஸார் புனேவிற்கு சென்றனர். அங்கு பதுங்கி இருந்த ராஜ்குமார் சுவாமியை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை மும்பை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த போது பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.