ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மெட்டா (Meta) நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் Nick Clegg ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பு நேற்று (19) நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.
இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாகப் பரப்பப்படும் வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள புதிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி இங்கு விளக்கமளித்துள்ளார்.
எதிர்காலத்தில் கொண்டுவரப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாராளுமன்றக் குழுக்களின் மீளாய்வின் போது இந்த சட்டமூலத்தில் மேலும் திருத்தங்களைச் சேர்க்க முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை , செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப துறையின் அபிவிருத்திக்கான இலங்கையின் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி விரிவாக விளக்கியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் இலங்கை அரசாங்கத்திற்கும் மெட்டா நிறுவனத்திற்கும் இடையிலான பங்காளித்துவத்திற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கும் இலங்கைப் பல்கலைக்கழகங்களை அபிவிருத்தி செய்வதற்கு மெட்டா நிறுவனத்துடன் ஒத்துழைப்புத் திட்டத்தை நிறுவுவதற்கும் முன்மொழியப்பட்டது.
தற்போதைய வேலைத்திட்டங்களுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்ற நிலையில் இலங்கையில் செயற்கை நுண்ணறிவுத் துறையின் அபிவிருத்தியில் கவனம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.