32 வயது முஸ்லிம் பெண் தனது 6 வயது மகனுடன் அமெரிக்கா சிகாகோவில் வசித்து வந்த நிலையில், 71 வயது முதியவர் ஒருவர் வீட்டுக்குள் கத்தியுடன் நேற்று முன்தினம் வந்துள்ளார்.
திடீரென அவர் வெறித்தனமாக அந்த பெண்ணையும், அவரது மகனையும் கத்தியால் தாக்கினார். அவர் தொடர்ந்து 6 வயது சிறுவனை கத்தியால் குத்திக்கொண்டே இருந்துள்ளார்.
இதில் 26 இடங்களில் அவனது உடலில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது. அவரையும் முதியவர் கத்தியால் தாக்கி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். உயிருக்கு போராடிய அவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பொலிஸார் அங்கு விரைந்து சென்று பெண்ணையும், சிறுவனையும் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததுடன், உடலில் இருந்த கத்தி வெளியே எடுக்கப்பட்டது.
ஜோசப் சுபா என்பவரை இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்த பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் வசித்து வந்த பாலஸ்தீனத்தை சேர்ந்த சிறுவனை இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் சண்டையின் எதிரொலியாக முதியவர் குத்திக்கொன்றதாக தெரியவந்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.