கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்திய பிரதான சூத்திரதாரி இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் இராமநாதபுரத்தைச் சேர்ந்த 39 வயதான மொஹமட் இம்ரான் கான் என்ற சந்தேக நபரே இந்திய தேசிய புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்டகாலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த குறித்த நபரை
2021ஆம் ஆண்டு தொடக்கம் கைது செய்வதற்காக இந்திய பாதுகாப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்து வந்துள்ளது.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக 5 இந்திய நாட்டவர்கள் இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.