பங்களாதேஷ் கிரிக்கெட் வீரரான முஷ்பிகுர் ரஹீம் பந்தை கையால் தொட்டதன் காரணமாக ஆட்டம் இழந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளது.
மேலும் நியூசிலாந்துக்கு எதிராக மேற்பூரில் இன்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முஷ்பிகுர் ரஹீம் இவ்வாறு ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்தின் ஹாய் ஜேம்ஸ் வீசிய பந்தை எதிர்கொண்ட முஷ்பிகுர் ரஹீம் பந்து துடுப்பில் பட்டபின் அது விக்கெட்டுக்கு செல்லலாம் என நினைத்து பந்தை கையால் மறுபக்கம் தட்டிவிட்டார். அந்த சந்தர்ப்பத்தில் நியூசிலாந்து வீரர்கள் களநடுவரிடம் ஆட்டமிழப்புக் கூறினர். இதனடிப்படையில் ஆட்டமிழப்பானது மூன்றாம் நடுவரிடம் சென்றதையடுத்து முஷ்பிகுர் ரஹீமின் களத்தடுப்புக்கு இடையூறு விளைவித்ததால் வழங்கப்பட்ட ஆட்டமிழப்பாக இது பதிவானது.
மேலும் இவ்வாறு பந்தை கையால் தொட்டு ஆட்டமிழந்த பங்களாதேஷின் முதல் வீரராக முஷ்பிகுர் ரஹீம் பதிவு செய்யப்பட்டதுடன் உலகளாவிய ரீதியில் 11 ஆவது வீரராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.