(புதியவன்)
இந்தியன் பிரீமியர் லீக் துடுப்பாட்ட தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய (18) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 09 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
சண்டிகரில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
மும்பை அணி சார்பில் சூரியகுமார் யாதவ் 78 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 36 ஓட்டங்களையும் மற்றும் திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர்.
பஞ்சாப் அணி சார்பில் பந்துவீச்சில் ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டுகளையும், சாம் கரன் 2 விக்கெட்டுகளையும் மற்றும் ரபாடா ஒரு விக்கெட்டினையும் பெற்றுக்கொண்டனர்.
193 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 183 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சில், மும்பை அணி சார்பில் ஜெரால்ட் கோட்சே மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் மத்வால், ஹர்திக் பாண்டியா மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் தலா ஒரு விக்கெட்டினையும் பெற்றுக்கொண்டனர்.
மேலும், போட்டியின் ஆட்ட நாயகனாக மும்பை அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.