இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 58ஆவது போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வரும் நிலையில் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியின் வீரர் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
ரோயல் சேலஞ்சர்ஸ் அணி சார்பில் விராட் கோலி மற்றும் அணியின் தலைவர் பாப் டு பிளேசிஸ் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்தனர்.
இந்நிலையில், அணியின் தலைவர் பாப் டு பிளேசிஸ் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி 47 பந்துகளுக்கு 92 ஓட்டங்களை பெற்று அரை சதத்தை பதிவு செய்தார்.
இந்நிலையில் நடப்பு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் விராட் கோலி இன்று தனது ஆறாவது அரை சதத்தை பதிவு செய்துள்ளார்.
நடப்பு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் ஆரம்ப போட்டிகளில் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் இறுதி இடத்தில் இருந்தது.
இதேவேளை, விராட் கோலியின் ஸ்ட்ரைக்-ரேட் தொடர்பிலும் பல விமர்சனங்கள் தொடர்ச்சியாக எழுந்தன.
இந்த விமர்சனங்களுக்கு விராட் கோலி இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் ஸ்டிரைக் ரேட் 153.51 உடன் 600 ஓட்டங்களை நிறைவு செய்த முதல் வீரரானார் விராட் கோலி.
இன்றைய போட்டியின் தொடர் சாதனைகளால் சமூக வலைத்தளங்களில் #ViratKohli என ட்ரெண்டாகி வருகிறது.
எவ்வாறாயினும் , இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் தீர்மானமிக்கதாக அமையும்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.